• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெக்டொனால்ட் சீஸ் பர்கரில் புழுக்கள்!

August 12, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் பிரபல மேக் டொனால்ட் உணகவத்தில் புழுக்கள் இருந்த சீஸ் பர்கர் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேரிபோரோ நகரிலுள்ள பிரபல மேக் டொனால்ட் உணகவத்திற்கு, ஒரு தாய் தன்னுடைய 3 வயது மகனுடன் சென்றுள்ளார்.கடைக்கு சென்ற பிறகு சீஸ் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.சிறிது நேரத்தில் அந்த உணவு பரிமாறப்பட்டது.அந்த உணவை சிறிது சாப்பிட்ட பிறகு அதில் புழுக்கள் இருப்பதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அந்த உணவை தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். “என்னுடைய மகனுக்கு மேரிபோரோ நகரிலுள்ள மேக் டொனால்ட் உணகவத்தில் சீஸ் பர்கருக்கு ஆடர் செய்தேன். அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

விசாரணையின்போது, சாட்சி வேண்டும் என்பதற்காக, எங்களுக்கு பரிமாறப்பட்ட உணவை பத்திரப்படுத்தியுள்ளேன்; அந்த உணவு வாங்கிய ரசீதையும் பத்திரமாக வைத்துள்ளேன் என்று அந்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

“எங்கள் உணவகத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்” என்று அந்த உணவக அதிகாரி தெரிவித்தார்.

மேலும்,கடந்த மார்ச் மாதம், கொல்கத்தாவிலுள்ள மேக் டொனால்ட் உணவகத்தில் இறந்த பல்லி இருந்த உணவு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க