• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிடிவி தினகரன்பொதுக் கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைஅனுமதி

August 11, 2017 தண்டோரா குழு

மதுரை மாவட்டம் மேலூரில் வரும் 14 -ம் தேதி டிடிவி தினகரன் கலந்துகொள்ள உள்ள பொதுக் கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் ஆதரவாளர் ஒருவர் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அம்மனுவில், ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் டிடிவி தினகரனும் பங்கேற்க உள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியோ அல்லது மனுவை நிராகரித்தோ காவல்துறை சார்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க