• Download mobile app
16 Jan 2026, FridayEdition - 3628
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கென்யாவில் வாக்களிக்க சென்றபோது குழந்தை பெற்ற பெண்

August 10, 2017 தண்டோரா குழு

கென்யா நாட்டில் குடியரசு தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த பெண் வாக்கு சாவடியில் குழந்தை பெற்று, வாக்களித்த சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கென்யா நாட்டில் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது.மேற்கு போகோட் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு பாலினா செமனாங் என்னும் நிறைமாத கர்ப்பிணி பெண்,வாக்களிக்க வந்துள்ளார்.அங்கு வந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த பெண்கள், குழந்தையை பெற்றெடுக்க பாலினாவுக்கு உதவி செய்துள்ளனர். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு தகவல் தந்துள்ளனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர். பாலினாவையும் அவர் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்கும் சிகிச்சை அளித்துள்ளனர். இருவரும் சுகமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு, பாலினா வாக்கு சாவடிக்கு திரும்பி தனது வாக்கை அளித்துள்ளார். “வாக்கு சாவடியில் குழந்தையை பெற்றெடுத்து, ஒரு குடிமகள் வாக்களிக்கும் உரிமையை நேர்த்தியாக செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பலர் ஆச்சரியப்பட்டனர்.

பாலினா போகாட் இனத்தை சேர்ந்வர்.பாலினா தன் மகளுக்கு ‘செப்குரா’ என்று பெயரிட்டுள்ளார். ‘செப்குரா’ என்ற பெயருக்கு ‘தேர்தல்’ என்று அர்த்தம்.

மேலும் படிக்க