• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்!

August 1, 2017 தண்டோரா குழு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ஏப்ரல் 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் படி விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன் பின் விஜயபாஸ்கர், அவரது மனைவி, தந்தை ஆகியோர் ஆஜராகினர்.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கிவுள்ளதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த ஊரான திருவேங்கைவாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலமும், குவாரியும் முடக்கப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை கடிதத்தை அடுத்து நிலத்தை முடக்கி புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க