• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சம்பளத்தை கல்வித்துறைக்கு நன்கொடையாக அளித்த டிரம்ப்

July 28, 2017 தண்டோரா குழு

அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித்துறைக்கு நன்கொடையாக தந்துள்ளார்.

அமெரிக்க குடியரசுத் தலைவராக தான் வெற்றிபெற்றால், சம்பளம் வாங்கபோவதில்லை என்று தெரிவித்திருந்தார் டிரம்ப்.அமெரிக்க சட்டத்தின்படி. குடியரசுத் தலைவர் சம்பளம் வாங்க வேண்டும் என்பதால், தனக்கு வரும் சம்பளத்தை சமூக பணிகளுக்கு வழங்குவதாக டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

தான் கூறியதை நிறைவேற்றும் விதமாக, அவர் பதவி ஏற்ற பிறகு, அவருக்கு கிடைத்த முதல் காலாண்டு சம்பளத்தை, தேசிய பூங்கா சேவைக்காக நன்கொடையாக கொடுத்தார். அதேபோல் தனது இரண்டாவது காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வி துறைக்கு நன்கொடையாக தந்துள்ளார்.

“டிரம்ப் அமெரிக்க மாணவ மாணவிகள் மீது அதிக அக்கறை கொண்டவர். அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்ந்த மற்றும் தரமான கல்வியை தர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர். அதேபோல் அமெரிக்காவில் கல்வி சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளார்” என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் STEM என்று குறிப்பிடப்படும் ‘அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் நல்ல முறையில் கவனம் செலுத்துவது அவசியம். STEM முகாம்கள் கல்வி துறையால் நடத்தப்படும். அந்த முகாம்களை நடத்த தேவையான பணத்தை டிரம்பின் நன்கொடையில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க