• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரசாரமான குட்டநாடன் மீன் குழம்பு

July 28, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

மீன் – 1 கிலோ
புளி (குடம்புளி) – 4 துண்டுகள்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
பூண்டு – 6-7 (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2-3 (நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் – 1-2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் குடம்புளி அல்லது புளியை 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம் சேர்த்து 10 நொடிகள் தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அதற்குள் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூளை 3-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு, வாணலியில் ஊற்றி, குறைவான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு ஊற வைத்த குடம்புளியை நன்கு கையால் பிசைந்து, அதனை அப்படியே வாணலியில் ஊற்றி, வேண்டுமானால் அத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் 20 நிமிடம் நன்கு மீனை கொதிக்க விட்டு இறக்கி, 30 நிமிடம் மூடி வைத்து, பின் பரிமாறினால், குட்டநாடன் மீன் குழம்பு ரெடி!!!

மேலும் படிக்க