தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ
தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 கட்டு (சுத்தம் செய்து, லேசாக அரைத்துக் கொள்ளவும்)
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 10 (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் கொத்தமல்லியை சுத்தம் செய்து, மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், சிக்கனை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின்பு அதில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து, அத்துடன் தயிர், வதக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கிரேவி ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் அரைத்த கொத்தமல்லி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கொத்தமல்லி சிக்கன் குருமா ரெடி!!!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு