சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடமாட்டேன் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விவகாரம் ஆந்திர திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் காஜல் அகர்வாலின் தெலுங்கு மானேஜர் ரோனி, அவரது வீட்டில் காஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.
இதனால் காஜல் அகர்வாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது,
போதைப் பொருள் விவகாரத்தில் எனது மானேஜர் ரோனி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடமாட்டேன். ஆதரவும் தெரிவிக்கவும் மாட்டேன். அவர் கைதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சினிமா தொடர்பான என் வேலைகள் முடிந்ததும் அவரிடம் வேறு தொடர்பு வைத்துக்கொள்வதில்லை என்றார். மேலும், அவரின் மற்ற நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரியாது. என் கேரியர் தொடர்பான விஷயங்களை எனது பெற்றோர் கவனித்து வருவதும் சினிமா துறையினருக்குத் தெரியும்எனக் கூறியுள்ளார்.
தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல்,தற்போது விஜய்யுடன் மெர்சல் படத்திலும் அஜித்துடன் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு