• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிவிட்டரில் இணைந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

July 25, 2017 தண்டோரா குழு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டிவிட்டரில் இணைந்துள்ளார். சில மணி நேரத்திலேயே அவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர்,பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், தற்போது அவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் இணைந்துள்ளார். தனது முதல் டிவிட்டாக நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக பொறுப்பெற்றுக்கொள்வதில் கவுரவம் அடைவதாகவும், என்னுடைய அனைத்து பொறுப்புக்களையும் மனிதாபிமானத்துடன் செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இணைந்ததை தொடர்ந்து அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 மணிநேரத்தில் 3.28 மில்லியனாக அதிகரித்துள்ளது.

எனினும், ராம்நாத் கோவிந்த் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை மட்டுமே பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க