• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலவிலிருந்து ஆம்ஸ்ட்ராங் கொண்டு வந்த பை 11 கோடி ரூபாய்க்கு ஏலம்

July 21, 2017 தண்டோரா குழு

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிலிருந்து, மண், கல் தூள்கள் ஆகியவற்றை சேகரிக்க பயன்படுத்திய பை 1.8 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போனது.

அமெரிக்கவின் நாசா விண்வெளி நிறுவனம் 1969-ம் ஆண்டு விண்கலத்தின் மூலம் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்ஸ்ட்ராங் நிலவிலிருந்து திரும்பி வரும்போது, அங்கிருத்து மண், கல் தூள்கள் ஆகியவற்றை சேகரிக்க எடுத்து வரப்பட்ட பை ஒன்றை பூமிக்கு கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த பை ஜான்சன் விண்வெளி நிலையத்தில் விடப்பட்டது.

அந்த பை கடந்த 2௦15-ம் ஆண்டு அமெரிக்காவின் இல்லினோயிஸ் நகரில் நடந்த ஏலத்தில் அதை 995 டாலருக்கு ஒரு வழக்கறிஞரிடம் விற்கப்பட்டது.

அந்த வழக்கறிஞர் அந்த பை குறித்து மேலும் சில தகவல்களை அறிந்துக்கொள்ள அதை நாசா நிறுவனத்திற்கு அனுப்பினார். விண்வெளி ஆய்வாளர்கள் அதை சோதனை செய்து பார்த்தபோது, நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் அதில் இருப்பதை கவனித்துள்ளார்கள். அந்த பையை ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பை மீண்டும் ஏலத்திற்கு விடப்பட்டது. அந்த பையை 1.8 மில்லியன் டாலருக்கு, இந்திய செலவானிபடி அது சுமார் 11 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மேலும் படிக்க