• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆல்ப்ஸ் மலையில் 75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியினரின் உடல் கண்டெடுப்பு

July 21, 2017 தண்டோரா குழு

சுவிட்சர்லாந்து நாட்டில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியினரின் உடல் ஆல்ப்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, மர்செளின், பிரான்சின் டுமோளின் தம்பதி, ஆல்ப்ஸ் மலை பகுதியில், மாடுகளை மேய்க்க சென்றுள்ளனர். அந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் உள்ளனர். மாடு மேய்க்க சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய குழந்தைகளும் உறவினர்களும் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எந்த பயனும் இல்லை.

ஆல்ப்ஸ் மலையின் பனி ஆறுகள் வற்றிய நிலையில் உள்ளது.இந்நிலையில் சன்ப்ளூரன் பனிபாறை அருகில் லெஸ் டேயேரேட்ஸ் என்னும் சுற்றுலா விடுதி உள்ளது. இந்த விடுதியின் ஊழியர் ஒருவர் பனி கட்டியில் இரண்டு சடலங்கள் இருப்பதை கவனித்துள்ளார். உடனே அவர் அங்கிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் தந்துள்ளார். அவர்கள் அங்கு வந்து அந்த சடலங்களை மீட்டுள்ளனர்.

“சடலம் கண்டுபிடித்த இடத்தில் ஒரு பை, கிண்ணங்கள், கண்ணாடி பாட்டில், மற்றும் காலணிகள், ஒரு புத்தகம் மற்றும் கை கடிகாரம் இருந்தது. புத்தகம், பை மற்றும் கை கடிகாரத்தை தடவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அணிந்திருந்த உடைகள் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடையாக இருந்தது. பனி புயலில் சிக்கி இறந்திருக்க கூடும். சடலங்களில் அடையாளங்களை சரியாக நிரூபிக்க, மரபணு சோதனை விரைவில் நடைபெறும்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க