• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உண்டியலில் திருட முயன்றவர் பிடிப்பட்டார்

July 20, 2017 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் உண்டியலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை ரயில்நிலையம் வாசல் அருகே விநாயகர் கோவில் உள்ளது. தினமும் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் வேலைக்கு வருவோர் அதிகம்.

அவ்வாறு வருபவர்கள் மற்றும் பிற பயணிகள் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களால் இயன்ற காணிக்கைகளை தினமும் செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இதனிடையே பரப்பரப்பாக காணப்படும் ரயில்நிலையம் விநாயகர் கோவில் உண்டியல் அருகே நின்று கொன்று ஒருவர் பபுள்கம் மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அவரை பிடித்து ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுக்குறித்து காவல்துறையினர் அவரிடம் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க