• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படப்பிடிப்பில் கங்கனா ரனாவத் காயம் நெற்றியில் 15 தையல்

July 20, 2017 தண்டோரா குழு

படப்பிடிப்பின் போது பலத்த காயம் அடைந்த நடிகை கங்கனா ரனாவத்திற்கு நெற்றியில் 15 தையல் போடப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ஜான்சி ராணியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் மணிகர்னிகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இதில், சக நடிகர் நிஹர் பாண்டியாவுடன் வாள் சண்டையிடுவது போன்ற காட்சியில் கங்கனா ரனாவத் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, நிஹர் பாண்டியா வீசிய வாளில் இருந்து தப்ப வேண்டிய கங்கனா சிறிது தடுமாறியுள்ளார். இதனால் வாள் கங்கனாவின் நெற்றியை பதம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து, ரத்தம் கொட்டிய நிலையில் கங்கனா அருகில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்கனாவின் நெற்றியில் மருத்துவர்கள் 15 தையல்கள் போடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க