• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொசுக்களை அழிக்க கூகுள் நிறுவனம் புதிய முயற்சி

July 19, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 2௦ மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்து அதை பறக்கவிட போகிறது கூகுள் நிறுவனம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இதனை செயல்படுத்த உள்ளது. வோல்பாச்சியா என்னும் பாக்டிரியாவை ஆண் கொசுகளின் உடலில் கலப்பதால், அவற்றிற்கு மலட்டு தன்மை ஏற்படுகிறது. இதனால், பெண் கொசுகளுடன் சேர்ந்த பின், பெண் கொசுக்கள் முட்டையிடும்போது, அதிலிருந்து புதிய கொசுக்களை உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கொசுக்களின் வளர்ச்சி முறியடிக்கப்படுகிறது.

ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது. இதனால் வோல்பாச்சியாவால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை. கடந்த 3 ஆண்டுகளில், 3௦௦௦ மக்கள் சிக்கா மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வியாதியை உருவாக்கும் ‘ஏ.டி.ஸ் ’ வகை கொசுக்களை ஒழிப்பதை தான் இந்த முயற்ச்சியின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க