• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஜித் போல் ஏன் கமலுக்கு தைரியம் இல்லை – அமைச்சர் சி.வி.சண்முகம்

July 17, 2017 தண்டோரா குழு

அஜித் போல் ஏன் கமலுக்கு தைரியம் இல்லை என சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் கமலை அஜித்துடன் ஒப்பிட்டு விமர்ச்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையில், கமல் தொடர்ந்து அரசியல் பற்றிய தன்னுடைய கருத்தையும் கூறி வருகிறார். அப்படி, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என ஆளும் கட்சியை விமர்சித்தார்.

இதற்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் கடுமையாக கமலை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் கமலை அஜித்துடன் ஒப்பிட்டு விமர்ச்சித்துள்ளார்.

அவர் கூறும்போது, கலைஞர் ஆட்சியில் அஜித் தன்னை மிரட்டி இங்கு வரவைத்துள்ளதாக மேடையிலேயே கூறினார்.அதே போல் தைரியம் ஏன் கமலிடம் இல்லை என கேள்வி எழுப்பினார்.மேலும், குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதற்கு தகுந்த பதில் சொல்லுவோம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க