• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடக்க முடியாத காளையை கிராபிக்ஸ் மூலம் விஜய்சேதுபதி அடக்குவது போல் செய்துள்ளதாக புகார்

July 15, 2017 தண்டோரா குழு

யாராலும் அடக்க முடியாத என் காளையை கிராபிக்ஸ் மூலம் விஜய்சேதுபதி அடக்குவது போல் செய்துள்ளதாக காளை உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் கருப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி ஒரு காளையை அடக்குவது போல் படத்தின் பர்ஸ்ட் லுக் இருந்தது.

இந்நிலையில்,திருச்சி லால்குடியை சேர்ந்த சரவணன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,
விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் வெளியிடப்பட்ட அந்த காளை தனக்கு சொந்தமான கொம்பன் என்றும் தங்களது கொம்பன் காளை களத்தில் ஓடிய புகைப்படத்தை எடுத்து விஜய் சேதுபதியுடன் சேர்த்து கிராபிக்ஸ் செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காளையின் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க