• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீன புரட்சியாளர் லியு சியாபோ மறைவு

July 15, 2017 தண்டோரா குழு

நோபல் பரிசு பெற்ற சீன புரட்சியாளர் லியு சியாபோ உயிரிழந்த பிறகு, வீட்டில் சிறை வைக்கப்பட்ட அவருடைய மனைவியின் மீது உலக கவனம் திருப்பப்பட்டது.

கடந்த 2௦௦9ம் ஆண்டு, சீனாவின் ஜனநாயகம் தொடர்பாக ‘சார்டர் 8’ என்னும் நூலை லியு சியாபோ வெளியிட்டார். இதையடுத்து, சீனா அரசு அவரை 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவருடைய மனைவி வீட்டில் சிறை வைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த லியுவிற்கு ஈரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் வழங்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பலனில்லாமல் உயிரிழந்தார்.

இந்நிலையில் லியுவின் இறப்பை அடுத்து, உலக கவனம் முழுவதும் வீட்டு சிறையிலிருக்கும் அவருடைய மனைவி மீது திரும்பியது. அவரை விடுவிக்குமாறு பலர் குரல் கொடுத்து வந்தனர். அவருக்காக எழுப்படும் குரலை சீன அரசு கேட்டு விடுவிக்குமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி விடுவிக்கப்பட்டால், கணவரை இழந்த அவரால் மீண்டும் சகஜமான நிலைக்கு திரும்ப முடியுமா? போன்ற கேள்விக்கு யாரும் சரியான பதில் கூற முடியாது. காலம் தான் ஒரு நல்ல பதிலை தரும் என்பதில் ஐயம் இல்லை.

மேலும் படிக்க