• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை -பொள்ளாச்சி பயணிகள் ரயில் நாளை முதல் துவக்கம்

July 14, 2017 தண்டோரா குழு

கோவை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த கோவை -பொள்ளாச்சி பயணிகள் ரயில் நாளை (ஜூலை 15) துவக்கப்பட உள்ளது.

கோவை-பொள்ளாச்சி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு துவங்கியது. சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. எனினும் ரயில் போக்குவரத்து துவங்குவதற்கான தேதி குறிப்பிடப்படாமல் இருந்துவந்தது.

இந்நிலையில் நாளை ( ஜூலை 15)கோவையில் இதற்கான துவக்க விழா நடைபெற உள்ளது. அதன்படி, கோவையில் இருந்து மதியம் 1.35 மணிக்கு பொள்ளாச்சிக்கு ரயில் புறப்படுகிறது. அந்த ரயில் பொள்ளாச்சிக்கு 2.40-க்கு வந்து சேருகிறது. இதனைத்தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் கோவைக்கு 4.30 மணிக்கு சென்றடைகிறது.

துவக்க விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கட்டுமான தலைமை பொறியாளர், உதவி தலைமை பொறியாளர் உட்பட பலர்கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் படிக்க