• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பவுலிங்கில் சொதப்பிய இந்திய பெண்கள் : அரையிறுதியில் ஆஸி

July 13, 2017 tamilsamayam.com

இந்திய அணிக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை லீக் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பிரிஸ்டலில் இன்று நடக்கும் 23வது லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் மிதாலி ராஜ், 34 ரன்கள் எடுத்த போது, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸை (5992 ரன்கள்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். இவர் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதன் பின் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த துவக்க வீராங்கனை பூனம் ராத் (106) சதம் அடித்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு, போல்டன் (36), கார்ட்னர் (45) நல்ல அடித்தளம் கொடுத்தனர். இதன் பின் வந்த லேன்னிங், பெர்ரி ஆகியோர் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை பதம்பார்த்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்த, ஆஸ்திரேலிய அணி, 45.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் படிக்க