• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம்!

July 12, 2017 தண்டோரா குழு

மும்பை மெட்ரோ ரயில்நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்களை அந்த மாநில அரசு வைத்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு மூலம் ஏற்படும் மாசுகளை குறைப்பதற்காகவும் மறுசுழற்சி முறையை மக்கள் பின்பற்றவும், மும்பை மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்களை மும்பை ரயில்நிலையங்களில் வைத்துள்ளது. இந்த இயந்திரத்திற்கு ‘கிராஷேர்’ என்று பெயர்.

மும்பை நகரின் டிஎன் நகர், அந்தேரி, சக்களா, மரோல் நகா, மற்றும் காட்கோபர் ஆகிய ரயில்நிலையங்களில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருள்களை அதில் போடும்போது, அவை நொறுக்கப்படுகிறது. அதை பயன்படுத்துவோருக்கு கூப்பன் மூலம் ஆடை, கண்ணாடிகள் ஆகியவற்றை வாங்குவதற்கு 2௦ முதல் 25 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த இயந்திரம் மூலம், ஒவ்வொரு நாளும் சுமார் 5௦௦௦ பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்க முடியும்.

இந்த இயந்திரத்தை மக்கள் உபயோகிக்க ஊக்கமளிக்கும் வகையில் தள்ளுபடி கூபன் தருவதால் அதிகப்படியனோர் பயன்படுத்துகின்றனர் என்று MMOPL நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

மேலும்,நொறுக்கப்பட்ட பாட்டில்கள் நார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் மூலம், துணி, கார்பெட்ஸ் மற்றும் மளிகை பொருள் வாங்கும் பைகளை தயாரிப்பதற்கு மூல பொருள்களாக பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய குறைந்த அளவில் செலவு செய்யும் விதமாக இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க