• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இதற்காக தான் பவர் பாண்டி’ படம் எடுத்தேன்

July 11, 2017 தண்டோரா குழு

‘பவர் பாண்டி’ கதையை உருவாக்கியதிற்கான காரணம் இது என ‘வேலையில்லா பட்டதாரி 2’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் தெரிவித்தார்.பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் தனுஷிடம் ‘பவர் பாண்டி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது என்று கேள்வி எழுப்பினர்.

இது குறித்து தனுஷ் கூறும்போது,

‘பவர் பாண்டி’ படத்தில் 80 வயதைத் தாண்டிய ஒருவருடைய காதலை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் 50 – 60 வயது தாண்டிய பெரியவர்களை பணம் கொடுக்காமல் வீட்டு வேலை செய்யும் உதவியாளர்களாக பார்க்கிறார்கள். பலர் வேலைக்கு செல்வதால் என்னுடன் வந்திருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை பல இடங்களில் பார்த்தேன்.

பெற்றோர்கள் 50- 60 வயது தாண்டியவுடன் நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதாக மட்டுமே ‘பவர் பாண்டி’ கதையைப் பார்த்தேன்.” என்று கூறினார்.

மேலும் , ‘பவர் பாண்டி’ 2-ம் பாகம் கதையையும் எழுதி வைத்துள்ளேன். கண்டிப்பாக 2-ம் பாகம் வரும். ஆனால், அதற்கிடையில் வேறு ஏதாவது ஒரு படம் செய்கிறேனா என்பதற்கான விடை எனக்கே தெரியாது. 2-வது அல்லது 3-வது இயக்கமாக ‘பவர் பாண்டி 2’ இருக்கும்.”

என்று கூறினார்.

மேலும் படிக்க