• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய் மில்டனின்கோலி சோடா-2′ படப்பிடிப்பு தொடங்கியது

July 10, 2017 தண்டோரா குழு

விஜய்மில்டன் இயக்கத்தில் வெளிவந்த கோலி சோடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம்பாகத்தை விஜய் மில்டன் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

விஜய் மில்டன் ‘கடுகு’ படத்தைத் தொடர்ந்து, தான் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கியுள்ளார். அதன் படி ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கப்பட்டது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘கோலி சோடா 2’ படத்தையும் விஜய் மில்டனே தயாரிக்கவுள்ளார்.

மேலும், விஜய் மில்டனுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க