• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவ ஜீப்பில் மனிதக் கேடயமாகபயன்படுத்தப்பட்ட இளைஞருக்கு ரூ.10இலட்சம் இழப்பீடு

July 10, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஜீப்பில் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக அம்மாநில அரசு வழங்கியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி காஷ்மீர் மக்களவை தொகுதிக்குக் இடைத்தேர்தல் நடந்தது. அத்தேர்தலை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது,பல இடங்களில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டும் வாக்குச் சாவடிகளைத் தீ வைத்தும் கொளுத்தினர்.

பாதுகாப்புப் படையினர் மீது கும்பல் கல்வீச்சில் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர்.

இந்நிலையில், கல்வீச்சு நடந்த போது, ராணுவ வீரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஃபரூக் அகமத் தார் என்ற இளைஞரை பிடித்து ஜீப்பில் கட்டி வைத்து, மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு மனித நல அமைப்புகள் ராணுவத்தினரின் இந்தச் செயலுக்கு கண்டனங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஜீப்பில் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக அம்மாநில அரசு வழங்கியிருக்கிறது.

இதற்கான ஆணையை ஜம்மு காஷ்மீர் மனித உரிமை ஆணையம் அம்மாநில அரசுக்கு இன்று (திங்கட்கிழமை) அனுப்பியுள்ளது.சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க