• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டிறைச்சியை கண்டுபிடிக்க “எலிசா” சோதனை

July 10, 2017 தண்டோரா குழு

வாகனங்களில் கொண்டு செல்லும் இறைச்சி மாட்டிறைச்சியா என்று தெரிந்துக்கொள்ள புதிய கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடெங்கிலும் மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையால், மக்கள் பல அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கைப்பற்றப்படும் இறைச்சி மாட்டிறைச்சி தானா? என்று கண்டுபிடிக்க புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கருவியானது ‘எலிசா’ என்னும் நோய் எதிர்ப்பு நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. இந்தக் கருவியை ஹைதராபாத் நகரை சேர்ந்த தலைமை அறிவியல் அதிகாரி ஜெயந்த் பானுஷாலி என்பவர் உருவாக்கியுள்ளார்.இதனுடைய விலை 8,000 ரூபாய் ஆகும். இந்த கருவி மூலம் நடத்தப்படும் சோதனையின் முடிவு 3௦ நிமிடங்களில் தரப்படும். தற்போது இந்த கருவி மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறைக்கு தரப்பட்டுள்ளது.

இது குறித்து தடவியல் நிபுணர் ஜெயந்த் பானுஷாலி கூறுகையில்,

“ வாகனங்களில் எடுத்து செல்லப்படும் இறைச்சி குறித்து வீண் சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் உண்மை என்ன என்று அறியாமல் குற்றம் சுமத்துவது, தேவையில்லாமல் மனித உயிர்கள் கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டு வருகிறது.தற்போது இதனை தடுப்பதற்கு இந்த கருவி உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க