• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்காலி ஸ்பெஷல்: பட்டர் ஃபிஷ் ஃப்ரை

July 10, 2017 tamilboldsky.com

தேவையான பொருட்கள்:

சால்மன் மீன் – 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1/4 கப் (பேஸ்ட் செய்தது)
பாதாம் – 1/4 கப் (பேஸ்ட் செய்தது)
சோள மாவு – 1-2 கப்
முட்டை – 2
பால் – 1/2 கப்
மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பௌலில் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், முந்திரி பேஸ்ட், பாதாம் பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் மீனில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அடுத்து ஒரு பெரிய பௌலில் சோள மாவு, முட்டை, பால், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் ஒரு மீன் துண்டை எடுத்து, கலந்து வைத்துள்ள சோள மாவுக் கலவையில் பிரட்டி, வாணலியில் உள்ள வெண்ணெயில் போட்டு, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போல் அனைத்து மீன் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், பெங்காலி ஸ்பெஷல் மீன் ஃப்ரை ரெடி!!!

மேலும் படிக்க