• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் இயக்குனர் சங்கர் வேண்டுகோள்

July 3, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் இயக்குனர் சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமலாகியுள்ளது. இதில் சினிமாதுறைக்கு அதிகப்பட்சமாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி திரையுலகினர் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழகத்தில் திரையரங்குகளில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பிரமாண்ட இயக்குநர் சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ’48-58 சதவிகிதம் வரியா? இது அதிகபட்சமானது. தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க