• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை

July 1, 2017 தண்டோரா குழு

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லைஎன தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

ஜிஎஸ்டி வரி விதிப்பால் வருவாய் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஜிஎஸ்டியை ஜெயலலிதா முன்மொழிந்தார். ஜிஎஸ்டியில் ஜெயலலிதா கூறிய திருத்தங்கள் ஏற்கப்பட்டதால் ஆதரித்தோம்.தமிழகத்தை பொருத்தவரை ஜிஎஸ்டி வரி முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாநில வருவாய் பாதிக்காது. ஏழை எளிய மக்கள் விலைவாசி ஏற்றத்திலிருந்து பாதுகாக்கப்படுவர்.உலகம் முழுவதும் 148நாடுகளில் ஒரே வரித்திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான வருவாய் கிடைக்கும்.ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க