• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதரவு திரட்ட சென்னை வந்த வேட்பாளர்கள்

July 1, 2017 தண்டோரா குழு

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு திரட்ட பா.ஜ.க வேட்பாளரான ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பளாரான மீராகுமாரும் இன்று சென்னை வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தும், அவருக்கு போட்டியாக எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக இரண்டு கட்சி வேட்பாளர்களும் இன்று சென்னைக்கு வருகின்றனர்.

மேலும் படிக்க