• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்

June 29, 2017 தண்டோரா குழு

பாஜக அரசின் மத்திய அமைச்சர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் மோதிஹரி என்னும் இடத்தில் நடந்த ஒரு பொது கூட்டத்திற்கு மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் சென்று இருந்தார்.அப்போது அவருக்கு பாதுகாப்பாக சென்ற போலீசார் முன்னிலையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மக்களும் தாங்கள் வசிக்கும் இடங்களை அவர்களே சுத்தமாக வைத்திருக்க தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்)திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல், இம்மாதத்தின் தொடக்கத்தில், மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, அவர் மோதிஹரியில் பாபா ராம்தேவ் நடத்திய யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர்களுடன் “யோகா பயிற்சி செய்யுங்கள்” என்று பதிலளித்தது சர்ச்சையை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க