• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஐஎம்-அகமதாபாத்தில் கல்வி பயில இருக்கும் அமைச்சர்கள்

June 29, 2017 தண்டோரா குழு

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் அகமதாபாத் நிர்வாக மேலாண்மை(IIMA) நிறுவனத்தில் Management and Leadership பாடங்களை படிக்க உள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 9 வெவ்வேறு துறை அமைச்சர்கள் தேர்தலுக்கு முன் அவர்கள் வாக்களித்த வாக்குறிதிகளை நிறைவேற்றும்படி, அகமதாபாத் நிர்வாக மேலாண்மை நிறுவனத்தில் சேர்ந்து Management and Leadership பாடங்களை கற்பதற்காக அங்கு வந்துள்ளனர்.

Management and Leadership for Good Governance என்னும் மூன்று நாள் நிகழ்ச்சியில் கல்வி, நல்வாழ்வு, கூட்டுறவு இயக்கம், சுகாதாரம் மற்றும் பொது-தனியார் கூட்டு ஆகிய பாடங்களை ஐஐஎம்ஏ ஆசிரியர்கள் கலந்துரையாடல் மூலம் மந்திரிகளுக்கு கற்று தருவார்கள்.

இது குறித்து நகர்புற வளர்ச்சி அமைச்சர் சி.பி சிங் கூறுகையில்,

“தேர்தலுக்கு முன் நாங்கள் பல வாக்குறுதிகளை தருகிறோம். ஆனால், வளங்கள் குறைவாக இருப்பதால், அதிகாரத்திற்கு வந்த பிறகு, நாங்கள் தந்த வாக்குறுதிகளில் நிறைவேற்ற சில முன்னுரிமைகளை அமைக்க வேண்டியுள்ளது.இங்கு வந்து புதிய முறைகளை கற்றுக்கொண்டு, மாநிலத்துக்கு உதவுவதற்காக பல பயனுள்ள கொள்கைகளை முன்னெடுக்க உதவும் என்று கருதுகிறேன்.

முன்பாக, மக்கள் மாநில அரசிடமிருந்து அதிகமாக எதுவும் எதிர்ப்பார்க்கமாட்டார்கள். ஆனால், தற்போது மாநிலத்திலும் மத்திய அரசிலும் பா.ஜ.கா பதவியில் இருப்பதால், மக்களுடைய எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கிறது” என்றார்.

(IIMA) பயில உள்ள அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு:

1.வருவாய் அமைச்சர்: அமர் குமார் பவார்.
2.குடிநீர், சுகாதாரம், நீர் வளத்துறை அமைச்சர்: சந்திர பிரகாஷ் சௌத்ரி.
3.நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்: சி.பி சிங்.
4.குழந்தை வளர்ச்சி மற்றும் சமூக நல அமைச்சர்: லூயிஸ் மராண்டி.
5.மனித வள மேம்பாட்டு அமைச்சர் நீரா யாதவ்.
6.கிராம மேம்பாட்டு அமைச்சர்: நிக்சன் சிங் முண்டா.
7.சுகாதார, மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்: ராம்சந்திர சந்திரவன்ஷி.
8.உழைப்பு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அமைச்சர்: ராஜ் பாலிவர் .
9.உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர்: சாரி ராய்

மேலும் படிக்க