• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொற்கால மனிதர் மோடி : ரெய்னா!

June 29, 2017 tamilsamayam.com

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மனைவி பிரியங்காவுடன் நெதர்லாந்தில் சந்தித்தார்.

சாம்பியன்ஸ் டிராபிக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க இவர் கடினமாக முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதுவரை ரெய்னா 223 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 5568 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, 65 டி20 போட்டிகள் (1307 ரன்கள்) விளையாடியுள்ள ரெய்னா, மோசமான பார்ம் காரணமாக சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்காமல், தவித்து வருகிறார்.

தற்போது உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., லில் மட்டும் விளையாடி வரும் இவர், தற்போது தனது மனைவியுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நெதர்லாந்து சென்ற இந்திய பிரதமர் மோடியை அங்கு நேரில் சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக ரெய்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’பொற்காலத்தை நோக்கி கொண்டுசெல்லும் மனிதரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி,’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க