• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான என்ஜின் மீது மூதாட்டி நாணயங்களை வீசியதால் பரபரப்பு

June 29, 2017 தண்டோரா குழு

சீனாவில் மூட நம்பிக்கையால் சில்லறை நாணயங்களை விமானத்தின் இன்ஜினில் வீசிய மூதாட்டிக்கு சிறை தண்டனை மறுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 80 வயது மூதாட்டி தனது குடும்பத்தினருடன் பயணம் செய்யவிருந்தார். அந்த மூதாட்டி விமானத்தில் ஏறும் முன், மூட நம்பிக்கையால் 9 சில்லறை நாணயங்களை விமானத்தின் இன்ஜினில் வீசியுள்ளார்.

அவர் செய்த செய்கையால் சந்தேகம் அடைந்த மற்றொரு பயணி காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளார். தகவல் அறிந்த அவர்களும், விரைந்து வந்து அந்த மூதாட்டியை விமானத்திலிருந்து இறக்கி அழைத்து சென்றுள்ளனர்.

விமான நிலைய காவல்துரையினர் அந்த மூதாட்டியை விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில், அவர் புத்த மதத்தை சேர்ந்தவர் என்பதால்,அவரும் அவருடைய குடும்பத்தாரும் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மூட நம்பிக்கையால் அவர் நாணயங்களை வீசியுள்ளார்.

அவர் செய்த தவறுக்கு 5 நாள் சிறைத்தண்டனை வழங்கலாம். ஆனால், அவருடைய முதிர்ந்த வயது காரணமாக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், விமானம் ஆறு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.

மேலும் படிக்க