• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பண மோசடி பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் கைது

June 28, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் நான் தான் என்று சொல்லிவந்தவர் பவர் ஸ்டார். இவர் நடிப்பது மட்டுமல்லாது சென்னையில் உள்ள வங்கிகளில் பணம் வாங்கித்தரும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.

2013ம் ஆண்டே ரூ.10 கோடி வாங்கி கொண்டு ரூ.1000 கோடி கடனாக வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீன் மூலம் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு போலீசாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில், “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங்கினார். ஆனால் சீனிவாசன் இதுவரை கடன் பெற்றுத் தரவில்லை. கமிஷனாக பெற்ற ரூ.1 கோடியையும் திருப்பித் தரவில்லை” என குறிப்பிட்டு இருந்தனர்.

இதனையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனை பெங்களூர் போலீசார் சென்னை வந்து கைது செய்து அவரை பெங்களூர் அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க