• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சௌந்தர்யா ரஜினிகாந்தின் அடுத்த படம்?

June 27, 2017 தண்டோரா குழு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியதை அடுத்து, தற்போது தனுஷின் ‘வி.ஐ.பி-2’ படத்தினை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் ‘வி.ஐ.பி-2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் மும்பையில் நடைபெற்றது. அப்போது, பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்,

“என் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளேன். தற்போது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்னும் கதையினை எழுதியுள்ளேன். இந்த படத்தின் நடிகர்கள் குறித்து தேர்வு நடத்தி கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் என்னுடைய அடுத்த படம் பற்றிய முழு தகவல் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க