• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் நோபல் பரிசு பெற்றவர் விடுதலை

June 27, 2017 தண்டோரா குழு

சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியூவை புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவருக்கு பரோல் வழங்க சீன அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருபவர் லியூ ஜியாவோபோ. கடந்த 2௦௦9ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்க முயற்சி செய்ததற்காக அவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2௦1௦ம் ஆண்டு, அமெரிக்காவின் பரிந்துரையின் பேரில் லியூவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாகவும், அமெரிக்க அரசுடன் லியூவுக்கு ரகசிய தொடர்பிருப்பதாகவும் சீன அரசு குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், கடந்த மாதம் உடல்நலக்குறைவால் சீனாவின் வட கிழக்கு நகரமான ஷென்யாங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் சீன அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் லியூவை பரோலில் விடுதலை செய்வதாக நேற்று அறிவித்தது.

மேலும் படிக்க