மஹாரஸ்டிரா மாநிலத்தில் ரூ.34,000 கோடி அளவுக்கு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மகாராஸ்டிரா மாநில விவசாயிகள் தங்கள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு வலியுறுத்தி 11 நாட்களாக போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், மஹாரஸ்டிரா மாநிலத்தில் ரூ.34,000 கோடி அளவுக்கு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர்தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1.5 லட்சத்துக்குக் குறைவான விவசாயிகள் கடன்களை முழுமையாகத்தள்ளுபடி செய்வதாகவும் விவசாயி கடன்களை முறையாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் தொகையில் 25 சதவீதம் திரும்ப அளிக்கப்படும் என்றும் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், நிதிச்சுமையைக் குறைக்க மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள், தங்களது ஒரு மாத ஊதியத்தினை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்கோரிக்கைவிடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு