• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி பாஸ்போர்ட்டிலும் இந்தி மொழி இடம்பெறும் – சுஷ்மா ஸ்வராஜ்

June 23, 2017 தண்டோரா குழு

அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

1967-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டி தலைநகர் டெல்லியில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் இனி ஆங்கிலத்துடன்,இந்தி மொழியும் இடம்பெறும் என அறிவித்தார். மேலும் 8 வயதிற்குட்பட்டோர், 60 வயது மேற்பட்டவர்களுக்கும் 10 சதவீத விமானக் கட்டணம் குறைக்கப்படுகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஏற்கனவே இந்தி திணிப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் குரல் கொடுத்து வருகிறது.இதனிடையே சுஷ்மா ஸ்வராஜின் இந்த அறிவிப்பு அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க