• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும்’ – ஆளுநர் வித்யாசாகர் ராவ்

June 21, 2017 தண்டோரா குழு

தமிழகம் மாற்றும் மகாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல இடங்களில் யோகா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

“சர்வதேசயோகா தினத்தின் நோக்கம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான்.யோகாவை இந்தியா உலக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. போதைக்கு அடிமையாக உள்ள இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து தடுக்கும் கருவியாக யோகா உள்ளது.

தமிழகம் மாற்றும் மகாராஷ்டிராவில் எனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு யோகா பாடம் கற்றுத்தரப்படும்” என்றார்.

மேலும் படிக்க