• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துபாயில் நடக்கும் ரஜினியின் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு!

June 20, 2017 tamilsamayam.com

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடைபெறவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ‘எந்திரன்’ இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகிவருகிறது. படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ரஜினியை எதிர்க்கும் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளிவரவிருக்கிறது.

மேலும் படிக்க