• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி

June 19, 2017 தண்டோரா குழு

தமிழக்கத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, அதிமுக எம்.எல்.ஏ.பி.பி.பரமசிவம் 11,12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு இலவச வைபை வசதி வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்,

தமிழக்கத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இதனால் 11,12 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பள்ளிகல்வித்துறையில் செங்கோட்டையன் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க