• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைஇராமகிருஷ்ணாகல்லூரி மாணவர்கள் இரத்ததானம்

June 14, 2017 தண்டோரா குழு

உலக இரத்த கொடையாளிகள் தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீஇராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

ஓவ்வொரு வருடமும் ஜூன் 14ம் தேதி உலக இரத்த கொடையாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஸ்ரீஇராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகஅறங்காவலர். வி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மையர் பி.சுகுமார் மற்றும் இயக்குநர்டாக்டர். ஐசக்கிறிஸ்டியன் மோசஸ்ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான விஸ்வநாதன்,பேரா.பிரகதீஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர்.

மேலும் படிக்க