• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக நாயகனுடன் இயக்குனர் கே.பாலச்சந்தரின் உருவச் சிலையை திறக்கும் வைரமுத்து

June 14, 2017 தண்டோரா குழு

மறைந்த ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை வைரமுத்துவும், கமலஹாசனும் இணைந்து அவரது சொந்த ஊரில் திறந்து வைக்கவுள்ளனர்.

இயக்குநர் பணியில் மட்டுமல்ல ஒரு சிறந்த தயாரிப்பாளர்கவும் விளங்கியாவர் கே.பாலசந்தர்.இவர் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கும் இளையராஜாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாடல் எழுதாமல் இருந்த போது தன்னுடைய படங்களுக்கு பாடல் எழுத வைத்ததோடு மட்டுமல்லாமல் ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானிடம் சிபாரிசு செய்து அந்த படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பினையும் அளித்துள்ளார்.

இதற்காக அவருக்கு நன்றிக்கடனாக,கே.பாலச்சந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில், கே.பாலச்சந்தரின் வெண்கலச் சிலையை வைரமுத்து திறந்து வைக்கிறார்.ஜூலை 9ம் தேதி நடைபெறும் இந்த விழாவில்,கமல் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க