• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையின் ஓவியத்தால் பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

June 14, 2017 தண்டோரா குழு

டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில், குழந்தை வரைந்த ஓவியத்தை வைத்து பாலியல்குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையைநீதிமன்றம் வழங்கியது.

தாய் இறந்து,தந்தையால்அனாதையாக விடப்பட்ட 8 வயது பெண் குழந்தை ஓன்று அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அப்போது அத்தையின் கணவர் அக்தர் அகமது, அந்தக் குழந்தையை யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிசெய்து வந்துள்ளார்.

இந்த விஷயம் தெரியவந்ததும் அக்தர் அகமது கைது செய்யப்பட்டார். குழந்தை, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கான ஆதாரமாக மருத்துவச்சான்றிதழ் இருந்துள்ளது. ஆனால், அக்தர் அகமது கடைசி வரை தன்னை நிரபராதியாகவே காட்டிகொண்டிருந்தார்.

இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. இதயைடுத்து, நீதிபதி, அந்தக் குழந்தையிடம் நடந்த விஷயங்களை வரையச்சொல்லி கிரையான்ஸும் பேப்பரும் வழங்கியுள்ளார்.

அப்போது அக்குழந்தை ஒரு வீட்டில் குழந்தை நிர்வாண நிலையில் கையில் பலூன்கள் வைத்திருந்த நிலையில் நின்றுகொண்டிந்தது போலவும், அதன் அருகே ஆடைகள் களையப்பட்டு கீழே இருப்பது
போல வரைந்திருந்தது.

இதனைத்தொடர்ந்து குழந்தையின் ஓவியத்தையும், மருத்துவச் சான்றிதழையும் ஆதாரமாக வைத்து நீதிபதி அக்தருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கினார்.

மேலும் படிக்க