• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தையின் ஓவியத்தால் பாலியல் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

June 14, 2017 தண்டோரா குழு

டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில், குழந்தை வரைந்த ஓவியத்தை வைத்து பாலியல்குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையைநீதிமன்றம் வழங்கியது.

தாய் இறந்து,தந்தையால்அனாதையாக விடப்பட்ட 8 வயது பெண் குழந்தை ஓன்று அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அப்போது அத்தையின் கணவர் அக்தர் அகமது, அந்தக் குழந்தையை யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிசெய்து வந்துள்ளார்.

இந்த விஷயம் தெரியவந்ததும் அக்தர் அகமது கைது செய்யப்பட்டார். குழந்தை, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கான ஆதாரமாக மருத்துவச்சான்றிதழ் இருந்துள்ளது. ஆனால், அக்தர் அகமது கடைசி வரை தன்னை நிரபராதியாகவே காட்டிகொண்டிருந்தார்.

இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. இதயைடுத்து, நீதிபதி, அந்தக் குழந்தையிடம் நடந்த விஷயங்களை வரையச்சொல்லி கிரையான்ஸும் பேப்பரும் வழங்கியுள்ளார்.

அப்போது அக்குழந்தை ஒரு வீட்டில் குழந்தை நிர்வாண நிலையில் கையில் பலூன்கள் வைத்திருந்த நிலையில் நின்றுகொண்டிந்தது போலவும், அதன் அருகே ஆடைகள் களையப்பட்டு கீழே இருப்பது
போல வரைந்திருந்தது.

இதனைத்தொடர்ந்து குழந்தையின் ஓவியத்தையும், மருத்துவச் சான்றிதழையும் ஆதாரமாக வைத்து நீதிபதி அக்தருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கினார்.

மேலும் படிக்க