• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகைக்கடையின் கூரையை உடைத்து திருட்டு

June 13, 2017 தண்டோரா குழு

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் நகைக்கடையில் கூரையை உடைத்து சுமார் 40 சவரன் வரை தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை.

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் நகைக்கடை வைத்திருப்பவர் துரைராஜ், இவர் வழக்கம் போல் நேற்று இரவு தனது நகைக்கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை மற்றும் உள்ளிருந்த சட்டர் உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் கம்மல், மூக்குத்தி, செயின், வளையல் உள்ளிட்ட சுமார் 40 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடையின் கூரையை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க