• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாத்மா காந்தியின் பேத்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

June 10, 2017 தண்டோரா குழு

கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய நமது தேசதந்தை மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

1946ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த “Indian Passive Resistance Campaign” போராட்டத்தின் 7௦ம் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்தியர்கள் யாரும் நிலமோ, வீடோ, சொத்துக்களோ வாங்கக்கூடாது என்ற பிரிட்டிஷ் அரசின் “கெட்டோ” சட்டத்தை எதிர்த்து 1947ம் ஆண்டு பெரிய போராட்டம் நடைப்பெற்றது.இந்த போராட்டத்தின் 70ஆம் ஆண்டு நினைவாக இந்த போராட்டம் நடைபெற்ற டர்பன் இடத்திலுள்ள “Freedom Park”ல் நடைபெற்றது.இவ்விழாவில் மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தனிராம் மூல்சந்த்(90) கலந்துகொண்டு உயிர் தியாகம் செய்தவர்கள் நினைவாக டர்பன் சுதந்திரப் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டார்.

இது குறித்து விருது பெற்ற எலா காந்தி கூறுகையில்,

“மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது, சத்தியாக்கிரக கோட்பாடுகளை உருவாக்கினார். ‘Passive Resistance Campaign’ மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடிய போராட்டம். அதன் பிறகு, சத்தியாக்கிரகத்திற்கும் அதே கொள்கையை அவர் பயன்படுத்தினார்” என்று கூறினார்.

மேலும் படிக்க