• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டாவது நாளாக தொடரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்

June 10, 2017 தண்டோரா குழு

சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்,வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 41 நாட்கள் அரைநிர்வானம் போராட்டம் மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் விவசாயிகளை சந்தித்தனர்.

இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றப்பட்டது.

இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்தும், கோரிக்களை நிறைவேற்றக் கோரியும் தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் நேற்று முதல் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராடி வரும் அவர்கள் 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க