• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போத்தனூர் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல்

June 9, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் போத்தனூரை அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவருக்கு வயது 85. இவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் இரண்டு சந்தன மரங்களை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு நஞ்சம்மாள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.

காலை விடிந்ததும் தோட்டத்திற்கு வந்து பார்த்த நஞ்சம்மாள் சந்தன மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் இச்சம்பவம் குறித்து நஞ்சம்மாள் போத்தனூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போத்தனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க