• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடையை வைத்து மதிப்பிடாதீர்கள் நடிகை பிரியங்காவுக்கு சன்னிலியோன் ஆதரவு

June 5, 2017 தண்டோரா குழு

இந்தி நடிகை பிரியங்காசமீபத்தில் பெர்லின் சென்றபிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கால் தெரியும் படி உடை அணிந்து, பிரதமர் முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசினார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

ஆனால்,அதில் தவறு இல்லை. என்பது போன்று பிரியங்கா சோப்ராவும், அவருடைய அம்மாவும் கால் தெரியும் படி உடை அணிந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டார்.இதையடுத்து, பிரியங்கா சோப்ராவின் இந்த செயலுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ராவுக்கு கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, மிகவும் ஸ்மார்ட் ஆன மனிதரை தான் நாம் இந்திய பிரதமராக தேர்வு செய்து இருக்கிறோம். அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். பிரியங்கா உடை அணிந்து சென்றதில் பிரச்சினை இருந்திருந்தால் பிரதமர் நிச்சயம் கூறி இருப்பார்.

ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை என்றார். மேலும், எனக்கு பிரியங்காவை நன்றாக தெரியும்.

அவர் மக்களிடம் நல்ல விதமாக பழகுபவர். சமூகத்துக்கு உதவி செய்பவர். எனவே, அவருடைய நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க