• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபத்தை உணராத வேடிக்கை மனிதர்கள் கண்டுகொள்ளாத காவல்துறை

June 2, 2017 தண்டோரா குழு

கோவை போத்தனூர் பகுதியில்,ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி 4 பேர் பலி மற்றும் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை பிடிக்கப்பட்டது. யானையை பிடிக்க வனத்துறையுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கும்கி யானைகள் யானைகள் மூலமாக காட்டு யானையை பிடித்தனர்.

அச்சமயம் பொதுமக்கள் சிலர் ஆபத்தை உணராமல் விளையாட்டாக அங்கு நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிலர் அவர்களை கண்டிக்காமல் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

இனி வரும் காலங்களிலாவது இது போன்ற நேரத்தில் காவல்துறையினர் கண்ணியதுடன் செயல்படவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க