• Download mobile app
03 Jul 2026, FridayEdition - 3796
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜர் மற்றும் சென்னை பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம்

May 27, 2017 தண்டோரா குழு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரையும், சென்னை பல்கலைகழக துணைவேந்தராக துரைசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“சென்னை அண்ணாப் பல்கலைகழக துணைவேந்தர் 3 அல்லது 4 மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுவார். அண்ணா பல்கலைகழகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்து விட்டார்.

பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து போடவிட்டாலும் மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது. விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
துணைவேந்தர் நியமனத்திற்கும், காலதாமதத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளது. இனி வரும் காலங்களில் துணைவேந்தர் பதவிக்கான கல்வி தகுதி, ஆகியவை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துணைவேந்தர் பதவி காலியாகும் 6 மாதத்திற்கு முன் தேர்வு பணி துவங்கும்.இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நியமனத்திற்கான நபர்கள் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து பரிந்துரையை வழங்கும். இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும்.”

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

மேலும் படிக்க